Friday, December 17, 2010

பிரிகின்ற காதலுக்கு கடைசியாய் ஒரு கடிதம்

இல்லாத ஒன்றுக்கு இலவு காத்து
இருக்கின்ற ஒன்றை இருட்டில் தள்ளி
மானம் போற்ற ஈனம் தழுவி
சரியென்ன தவறென்ன புரியாமல்

தீயள்ளி தின்கிறேன்
கூடாதென தெரிந்தும் செய்கிறேன்

கண்ணீரில் பேதமென்ன‌
உனதென்றும் பிரிதென்றும்

மனக்கொலைக்கு துணிகின்றேன்
மீளாத பாதைக்கு விரைகிறேன்

வேண்டாத வரமொன்று வேண்டிப் பெற்றேன்
வேண்டிமென தெரிந்தும் வீசி எறிகிறேன்

இனிக் காதல் இல்லை வாழ்தலுமில்லை
சாதல் சாதல் சாதலே அன்றி வேறில்லை....