Sunday, March 22, 2009

காய்ந்தப் பூக்கள்...

விட்டு கொடுப்பதில் உண்டு வாழ்க்கை
விட்டு பிடிப்பதில் இல்லை
விட்டால் பிடிப்பதும் இயலாத காரியம்.....

அடக்கி ஆள்வதும் ஆள நினைப்பதும்
மிக முட்டாள் தனம்...

காதல் பேசும் போது கனிரசமே என்ற உன் உதடுகள்
கட்டில் மேல் கவி எழுதிய உன் வார்த்தைகள்
இன்று மட்டும் வேசியே! என்று ஏசியதென்னவோ.....

நம் காதல் கடவுள் முடிச்சு என்றாயே
இன்று கடவுள் என் பக்கம், உன்னை வெல்வேன் என்கிறாயே
விடை சொல் இதற்கு
உன் இருகைகளில் வலக்கை தோற்று இடக்கை வெல்கிறதா?

கண் என்றும் மணியென்றும் போற்றினாயே
இன்று மண் என்று தூற்றுவது சரியாமோ...
வாழ்வு செழிக்கவே வழி தேடச் சொன்னேன்
அது முயற்சியால் மட்டுமே கிட்டும் என்று அறிவுறுத்தினேன்....

அதற்கும் என் மேல் பழி உரைத்தாய்
என் வார்த்தைகளுக்கு மறுப்பு வேண்டாம் என்பதில்லை...
ஆனால் நல்ல கருத்துக்கு தேவையா வெறுப்பு...

நீ விட்டு சென்ற கால் தடம் பற்றி நான் செல்ல நினைத்தேன்
நம் லட்சியம் வெல்ல விரைந்திட வேண்டுமே
காதல் ஒரு கட்டம் தான்
அதற்கும் மேலே, வாழ்வு!!!!
தேவைகள் பல பிறக்கும்
எதிர்பார்ப்புகள் தோன்றுமே
அதை தான் நான் உணர்த்துகிறேன்

ஆனால் இனி அது இல்லை
உதிர்ந்த மலராவது உபயோகப்படும்
காய்ந்த மலரானது நம் காதல்
இனி அது பயனளிக்குமா மீண்டும்?

இறையே, நீயே பதில் சொல்....

No comments: